புதுக்கோட்டை, நவ.7: புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு தங்கள் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயனம் செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவராரியன பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எத்த பேருந்து இயக்கப்பட்டதோ அந்த பேருந்து மட்டுமே தற்போது வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.