மன்னார்குடி, நவ.7: மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியின் உணவு, குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.பின்னர் மாணவிகளிடம் பேசிய மாவட்ட கலெக்டர் ஆனந்த், கல்லூரி காலங் களில் நன்கு பயில வேண்டும். அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் குறித்து அறி விப்புகளை தெரிந்து கொண்டு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். மேலும் தினசரி செய்திதாள்களை தொடர்ந்து படித்து பழக வேண்டும். பட்டப்படிப்பில் முயற்சி செய்து நன்கு பயின்றால் வாழ்க்கையில் உயரலாம் என அறிவுரை கூறினார். மேலும் மாணவிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்ட றிந்தார்.