தண்டராம்பட்டு, நவ.7: தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 6 மாணவிகள், 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக கிருஷ்ணமூர்த்தியும், உதவி ஆசிரியராக புவனா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியை புவனா கடந்த சில நாட்களாக மகப்பேறு விடுப்பில் உள்ளார். அவருக்கு பதிலாக வேலையாம்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியர் மதலைமுத்து நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 3ம் தேதி முதல் பள்ளிக்கு வருகிறார்.