காடையாம்பட்டி, நவ.6: காடையாம்பட்டி அருகே மதமாற்றம் செய்ய வந்த தர்மபுரியைச் சேர்ந்த பெண் உட்பட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் காட்டூர், மோட்டூர், கோவிந்தகவுண்டனூர், மங்கானூர், குருவாளியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை கஞ்சநாயக்கன்பட்டி காட்டூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று கூறி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் மடக்கி விசாரித்தனர்.