சேத்தியாத்தோப்பு, நவ. 6: சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதங்குடி ஊராட்சியை சேர்ந்த அள்ளூர் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான மேல் நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி முழுவதும் சேதமடைந்து குடிநீர் கசிந்து வருகின்றது. தொட்டியின் மேல் செடி கொடிகள் முளைத்து தொட்டி சேதமடைந்து வருகின்றது. மேலும் நீர்தேக்க தொட்டியை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமலும், பராமரிக்காமலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தொட்டிக்கு அருகே உள்ள பகுதிகளில் சுகாதாரமாக இல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில்களும், கப்புகளும் கிடக்கின்றன. அள்ளூர் கிராம கிழக்கு தெருவில் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கின்றது.