கடலூர், நவ. 6: கடலூர் அருகே ரெட்டிச்சாவடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த 3 பேரை டெல்டா போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கடலூர் அருகே ரெட்டிசாவடியில் கடந்த 21.5.2016 அன்று ரமேஷ் மகன்கள் வினோத்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கு தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் லக்ட்சுமணன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். மாவட்ட எஸ்பி அபிநவ் உத்தரவின்பேரில் டெல்டா சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனி போலீஸ் படை இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.