கந்தர்வகோட்டை, நவ.6: கந்தர்வகோட்டையில் கறம்பகுடி சாலை ஓரத்தில் நீண்டு வளர்ந்துள்ள முட்செடிகள் வாகன ஓட்டிகளை பதம்பார்த்து வருகிறது. அவைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.கந்தர்வகோட்டையில் கறம்பகுடி சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலையோரத்தில் ஒரு புறம்மட்டும் முட்செடிகள் நீண்டு வளர்ந்துள்ளன. இது அவ்வழியாக வருபவர்களை பதம்பார்க்கிறது.அதிலும் கனரக வாகனங்கள் வரும்போது இருச்சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையின் ஓரத்திற்கு வரும்போது முட்செடிகள் உடலில் கீறல்களை ஏற்படுத்துகிறது.