பெரம்பலூர்,நவ.5:மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு கட்டாயம் தரக்கூடாது என கால்நடைத்துறை இணை இயக்குநர் மதன கோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:கால்நடைகளை சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பராமரித்தல் மிக முக்கியம். அதிலும் மழை க்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நச்சுயிரிகள், நுண்ணுயிரிகள் மற் றும் ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் பூஞ்சான் தொற்று ஏற் படுவதால்செரிமான குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடற்புழுக்களால் ரத்த சோகை ஏற்படலாம். தொழுவம் மற்றும் சுற்றுப் புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படலாம். சினை மாடுகள், கன்றுக்குட்டிகள், இளம் ஆட்டுக்குட்டிகள் மழைக் காலங்களில் அதிக பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க மழையில் நனைய விடாமல் தொழுவத்தில் கட்ட வேண்டும்.