தரங்கம்பாடி, நவ.5: திருக்கடையூர் அருகே அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி சீரமைப்பு பணி மும்முரமாக நடக்கிறது. நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிமேடு செல்லும் சாலையில் தெற்கு தெரு, நடுத்தெரு பகுதியின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சரிசெய்ய வந்த மின்வாரிய பொறியாளர்களிடம் முறையிட்டனர். அதை தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.