காஞ்சிபுரம், நவ.5: புதுடெஙரலியில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுடெல்லி தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, கலவரம் ஏற்படுத்தியதை கண்டித்தும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க மாநில இணை செயலாளர் சிவக்குமார் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.