கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி 23வது ஆண்டு விழா

மதுராந்தகம், ஏப்.28: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 23வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கி உரையாற்றினார். முனைவர் சுப்பராஜ் அனைவரையும் வரவேற்றார். முனைவர் காசிநாத பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் திரைப்பட நடிகர் சதீஷ் மற்றும் கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் கல்லூரி துணை டீன்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவின்போது பல்கலைக்கழக தேர்வுகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

The post கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி 23வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: