செங்கல் சூளையில் விருப்பம் இல்லாமல் பணியாற்றிய 37 பேர் மீட்பு

நாமக்கல், நவ.1: நாமக்கல் அருகே, செங்கல் சூளையில் விருப்பம் இல்லாமல் பணியாற்றிய 37 பேர் மீட்கப்பட்டனர்.நாமக்கல் அருகே போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 37 பேர் தங்கிவேலை செய்து வந்தனர். இவர்களை செங்கல் சூளை உரிமையாளர் கொத்தடிமையாக நடத்துவதாக, கலெக்டர் மெகராஜிடம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று மாலை அங்கு சென்று, 5 குழந்தைகள் உள்பட 37 தொழிலாளர்களை மீட்டனர். இவர்கள் அனைவரும் உறவினர்கள்.  ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், செங்கல்சூளை உரிமையாளர் முன்பணம் கொடுத்து, தங்களை வேலைக்கு வைத்துள்ளார். ஆனால் இங்கு தங்கி வேலை செய்ய விருப்பம் இல்லை என  தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

Related Stories: