சீர்காழி, நவ.1: சீர்காழி நகராட்சி கோவிந்தராஜ் நகரில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் ஏற்பட்டுள்ளதால் அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜ் நகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இறங்கி நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் காய்ச்சல், தோல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.