கோவை, நவ. 1:கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 35வது நினைவுதினம் ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று காலை அனுசரிக்கப்பட்டது. இந்திராகாந்தி உருவ படத்துக்கு காங்கிரஸ் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதையொட்டி, மயூரா ஜெயக்குமார் தலைமையில் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வீனஸ் மணி, திருமூர்த்தி, வக்கீல் கருப்பசாமி, சவுந்தரகுமார், கிருஷ்ணமூர்த்தி, கோவை போஸ், இராம.நாகராஜ், திலகவதி, பாஸ்கர், துளசிராஜ், தமிழ்செல்வன், ஜனார்த்தனன், பாலசுப்ரமணியம், கருடா பாலு, குமரேசன், கேபிள் வினோத், கருப்பசாமி, ராமச்சந்திரன், காந்தகுமார், கான் பாய், குணசேகரன், தங்கம் பழனிசாமி, ரகமத்துல்லா, ரூபர்ட், காமராஜ்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.