ஈரோடு, நவ.1: ஈரோட்டில் அதன் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தத்தில் ஆசியா, ஐரோப்பியாவில் உள்ள 16 நாடுகளுடன் நவம்பர் 4ம் தேதி மத்திய அரசு கையெழுத்திடுகிறது. இதன்மூலம், 16 நாடுகளில் இருந்தும் வேளாண் விளை பொருட்கள் எந்தவித வரியும் இல்லாமல் இந்தியாவிற்குள் இறக்குமதியாகும்.பால் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். இந்திய பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்காமல் போகும். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது. இதைக்கண்டித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நவம்பர் 4ம் தேதி தமிழகத்தில் விவசாய சங்கம் சார்பில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த பிரச்னை குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்படும். அரசு சார்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். கரும்பிற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த விலையை சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்காமல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது.