கோவை, நவ.1:கோவை அடுத்த மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து மனைவி கருப்பாத்தாள்(70). இவர், நேற்று முன் தினம் அங்குள்ள ரோட்டில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.கோவை- துடியலூர் அருகேயுள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(65). இவர், நேற்று முன்தினம் இடையர்பாளையம்- வடவள்ளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும்போது டயர் வழுக்கியதில் பைக்குடன் கீழே விழுந்தார். படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.