திருத்துறைப்பூண்டி, நவ.1:திருத்துறைப்பூண்டியில் சேறும் சகதியுமான உழவர் சந்தை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி ஒழுங்கு முறை விற்பனைகூட வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு வேதாரண்யம் தாலுகா பகுதியான கத்தரிப்புலம், செட்டிபுலம் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து நாட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சந்தை வளாகம் முறையான பராமரிப்பின்றி சேறும் சகதியுமாக இருந்து வருகிறது. மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி தளமாக இருக்கிறது. மேலும் பன்றி, நாய்கள், மாடுகள் உள்ளே நுழைந்து மேலும் சந்தையை அசுத்த படுத்துகிறது.