முத்துப்பேட்டை, நவ.1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் ஆடுகள் மாடுகள் உட்பட கால்நடைகள் வளர்ப்போர் பலரும் அவற்றை முறையாக பராமரிக்க வழியின்றி வீதிகளில் திரிய விட்டுள்ளனர். இதனால் இரவு பகல் எந்நேரமும் நகர்பகுதி கடைவீதிகளில் சாவகாச உலா வரும் கால்நடைகள் அங்கு தேங்கிக்கிடக்கும் காய்கறி பழக்கழிவுகள், ஓட்டல்கள், மளிகை கடைகளிலிருந்து வீசியெறியப்படும் கழிவுகள் ருசிபார்க்கும் இவை வயிறு நிரம்பியதும் கிடைத்த இடத்தில் கால்நீட்டி ஓய்வெடுக்கின்றன. சில போக்குவரத்து பாதையில் ஜம்பமாக படுத்து வாகன விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. அதேபோல் மாடுகள் தெருக்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகளவில் தின்று உயிரையும் விடுகிறது.இதில் குறிப்பாக பகலில் கடைதெருவில் வளம் வரும் மாடுகள் பொதுமக்களை வங்கி செல்லும் பொருட்களை பறித்துக்கொண்டு ஓடுகிறது.