பைக் மோதி ஒருவர் பலி

கோவை, அக்.31: கோவை போத்தனூரில் உள்ள ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஆனந்தன்(53). இவர், அங்குள்ள பேக்கரியில் டீ-மாஸ்டராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்-செட்டிபாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: