மாதாந்திர விளையாட்டு போட்டி 6ல் துவக்கம்

ஈரோடு, அக். 31: ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டி வரும் 6ம் தேதி வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.அதன்படி, தடகளத்தில் மாணவர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 1,500மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல் ஆகிய போட்டிகளும், மாணவியர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 800மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், கூடைப்பந்து போட்டிகளும் நடக்கிறது.நீச்சல் போட்டியில் 50மீ, 100மீ, 200மீ, 400மீ பிரிஸ்டைல், 50மீ பேக் ஸ்டிரோக், 50மீ பிரஸ்ட் ஸ்டிரோக், 50மீ பட்டர்பிளை, 200மீ ஐ.எம் ஆகிய பிரிவின்கீழ் போட்டி நடத்தப்படுகிறது.

மாணவ, மாணவியர்களுக்கான கைப்பந்து போட்டி கொல்லம்பாளையம் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தடகளம் மற்றும் நீச்சல் போட்டியில் ஒருவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். தடகளம், குழு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 6ம் தேதி காலை 8 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும்  சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

Related Stories: