மன்னார்குடி, அக்.31: மன்னார்குடி அருகே ராமாபுரம் மற்றும் வாஞ்சியூர் கிராமங்களில் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்து நடவு வயல் வரப்புகளில் வரப்பு பயிராக வெண்டை நடவை மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தினேஷ்பாபு, பாலசுந்தரம், விஜயகுமார் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். இதுகுறித்து மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில், சுற்றுச்சுழல் சார்ந்த தொழிற்நுட்பம் (இ கலாஜிக்கல் இன்ஜினியரிங் ) மூலம் விவசாயிகள் தங்களின் வயல்களின் வரப்புகளில் காய்கறிகள், மலர்கள் மற்றும் பயறு வகை செடிகள் பயிற்றுவிக்கப்படும் போது அவைகள் வளர்ந்து நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். அதனால் வயல்களில் பூச்சிகளின் தாக்கத்தை கட்டு படுத்தலாம். ஒரு வயலில் இருந்து அருகில் உள்ள வேறு வயல்களுக்கு பூச்சிகள் பரவுவதையும் கட்டுப் படுத்தலாம்.