காரைக்கால், அக்.27: புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா காரைக்கால் வர்த்தக சபை அரங்கில் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு `அன்புள்ளஆசிரியருக்கு’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், ஆசிரியர்களுக்கு விரைவில் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். மேலும், இந்த கல்வி ஆண்டியில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.