கடம்பூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பணி

நீடாமங்கலம், அக்.25: நீடாமங்கலம் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் தஞ்சை வேளாண்மை கல்லூரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடு, வீடாக சென்று நில வேம்பு கசாயம் கொடுத்தனர்.

வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், வீட்டை சுற்றி தேங்காய் ஓடு, பீங்கான் போன்ற மக்காத பொருள்கள் இல்லாதவாறு சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் நீடாமங்கல்ம அரசு மருத்துவமனை சித்த மருத்துவ ஆளுநர் சகாயராஜ், கடம்பூர் பழனிகுமார் கலந்து கொண்டனர்.

Related Stories: