மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்ககோரி ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், அக். 24: ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற பள்ளி சத்துணவு பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் உதயகுமார், மாநில தலைவர் லூயிஸ் பிரான்சீஸ், தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Related Stories: