சீர்காழி, அக்.24:சீர்காழி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்து கிடக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றன. சீர்காழி தென்பாதி, கடைவீதி, பிடாரி வடக்கு வீதி, புதிய பழைய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. கால்நடைகள் அனைத்தும் பெரும்பாலும் சீர்காழி நகரில் கொட்டப்படும் குப்பைகளையும், சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்களையும் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. கால்நடைகள் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தனது இருப்பிடமாக சாலையிலேயே பயன்படுத்துகின்றன. கால்நடைகள் திடீரென்று சாலைகளை கிடைக்கும்போது வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகின்றன.
இதனால் பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. பழக்கடைகள் காய்கறி கடைகளில் கால்நடைகள் உள்ளே நுழைந்து பழம் காய்கறிகளை தின்று விடுவதும், சேதப்படுத்தும் தொடர்கதையாக இருந்து வருகிறது.