உணவு பாதுகாப்பு அலுவலர் தகவல் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு நிலவேம்பு கசாயம்

திருவாரூர், அக்.24: திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் வழங்கினார். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்திலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. இதில் நிலவேம்பு குடிநீரை ஊழியர்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அலுவலகத்தின் நிர்வாக மேலாளர் முருகானந்தம் மற்றும் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஹேமா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: