ஓமலூர், அக்.23: பெரியார் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா நாளை(வியாழக்கிழமை) 12 மணியளவில் பெரியார் கலையரங்கில் நடக்கிறது. இதுகுறித்து, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது. பெரியார் பல்கலைக்கழகத்தின் 19-வதுபட்டமளிப்பு விழா பெரியார்கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பெரியார்பல்கலைக்கழகவேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால்புரோகித் கலந்து கொண்டு முனைவர்பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 261 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழகத்துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலைப்பாடங்களில் முதலிடம் பிடித்த 95 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்டச்சான்றிதழை வழங்குகிறார். பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, டி.எஸ்.சிஎனப்படும் முதுமுனைவர் பட்டச்சான்றிதழையும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் வழங்குகிறார். வழங்குகிறார்.