அரியலூர், அக். 23: ஆனந்தவாடியில் அரசு சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்று கருத்துகள் சொல்ல பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் வட்டம் கயர்லபாத் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆனந்தவாடி சுண்ணாம்புக்கல் சுரங்கம் சொந்த பயன்பாட்டுக்கான சுரங்க விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஆனந்தவாடி- இரும்புலிக்குறிச்சி மெயின் ரோடு, ஆனந்தவாடி கிராமத்தில் நாளை நடக்கிறது. கலெக்டர் ரத்னா தலைமை வகிக்கிறார.