திருமயம்.அக்.23: திருமயம் பகுதி இளைஞர்கள் காக்கி சட்டை அணியாத காவலர்கள் தான் எனவே விழிப்புடன் தீபாவளி கொண்டாட வேண்டி போலீசார் சார்பில் வெளியிட்ட ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் தீபாவளி நெருங்கிவரும் நிலையில் மக்கள் தீபாவளியை கொண்டாட தாயாராகி வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஒருசில திருடர்கள் மக்களின் அஜாக்கிரதை பயன்படுத்தி கொண்டு வழிபறியில் ஈடுபட கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் மாலை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டி திருமயம் போலீசார் சார்பில் வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது திருமயம் பகுதியில் உள்ள வாட்ஸ் குருப்பில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் போலீசார் ஒருவர் திருமயம் பகுதி மக்கள் இளைஞர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதோடு பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து சில அறிவுரைகளை தெரிவிக்கிறார்.