நாகர்கோவில், அக்.23 : குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறை பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன், துணை தாசில்தார் அருள்லிங்கம், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஊழியர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று பகல் 12 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் சிறு, சிறு மூடைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றி சோதனை செய்த போது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது.