புதுக்கோட்டை, அக்.18: டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா, உலக மாணவர்கள் தினமாக மௌண்ட் சீயோன் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் பாரதிராஜா வரவேற்றார். மாணவர்கள் தினம் பற்றிய பல்வேறு கலைநிகழ்ச்சிகள், மாணவர்கள் கண்கவரும் நிகழ்ச்சிகளாகவும், அறிவிக்கு விருந்தளிக்கும் விதமாகவும் நடந்தது. முடிவில் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் குமரேஷ் நன்றி கூறினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் வரலெட்சுமி, கிருபாஜெபராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.