புதுக்கோட்டை, அக்.18: அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் முத்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜூ (29). வேன் டிரைவரான இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜூவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வௌியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.