கல்லூரி மாணவியை கடத்தியவர் கைது

தூத்துக்குடி, அக். 18:  தூத்துக்குடி  முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்து மணிகண்டன் (22). அப்பகுதியில்  மெக்கானிக்காக வேலைபார்த்து வரும் இவர்,  கடந்த 11ம்தேதி தூத்துக்குடி தனியார்  கல்லூரியில் படித்துவரும் 17வயது மாணவியை திருமண ஆசை வார்த்தைகூறி பஸ்சில் கடத்திசென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார், மாணவியை மீட்டதோடு இதுகுறித்து வழக்குப் பதிந்து முத்துமணிகண்டனை கைதுசெய்தார்.

Related Stories: