அரியலூர், அக். 17: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தில் விவசாய உற்பத்தியாளர் குழும அறிமுக ௯ட்டம் நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன் தலைமை வகித்தார். திருவேரகம் முன்னிலை வகித்தார். மகாலிங்கம் வரவேற்றார். திட்ட அமைப்பாளர் குமார் வாழ்த்தினார். நபார்டு வங்கி மாவட்ட திட்ட மேலாளர் நவீன்குமார் பேசும்போது, மத்திய அரசும், விவசாய வங்கியும் (நபார்டு) இணைந்து விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நீர் மேலாண்மைக்காக நீர் வடிகால் பகுதிகளில் சிறு அணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாநில அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு விதைகள், மருந்துகள், பூச்சி கொல்லிகள் மானிய விலையில் வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாய உற்பத்தியாளர் குழுமம் மூலமாக விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு அரசு பதிவு பெற்ற நிறுவனமாக உருவாக்கி அதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது.