கறம்பக்குடி, அக்.16: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தராஜன் (43). இவர் வாராப்பூர் வன தோட்ட கழகத்தில் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல வன பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு மாலை வாறாப்பூர், மலையூர், நம்பப்பட்டி வழியாக ஆலங்குடிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது கீழ புலவங்காடு கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர், கீழ மஞ்சக்கரை அக்னி ஆறு அருகே அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த சவுந்தராஜனை வழி மறித்து தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர்.