புதுக்கோட்டை, அக்.16: புதுக்கோட்டையில் நடந்த தொழிலாளி கொலையில் 2 பேரிடம் ரகசிய விசாரணை நடத்துகின்றனர். புதுக்கோட்டை அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மகன் வினாேத்சக்கரவர்த்தி (35). தொழிலாளி. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் அன்பானந்தத்தின் உறவினரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.