அரியலூர், அக். 15: அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று நடந்தது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு மற்றும் பாரதியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்னன் துவக்கி வைத்தார். கல்வி மாவட்ட அலுவலர்கள் செல்வராஜ் (அரியலூர்), மணிமொழி (செந்துறை), ஹரிசெல்வராஜ் (உடையார்பாளையம்) முன்னிலை வகித்தனர்.