கரூர் ராமகிருஷ்ணபுரம் முதல் குறுக்கு தெருவில் ஜல்லி கற்கள் கொட்டியும் தார் கலவை போடாததால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், அக். 15: கரூர் ராமகிருஷ்ணபுரம் முதல் குறுக்குத்தெருவில் சாலை பராமரிப்பின்றி இருந்தது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் நிரவப்பட்டது. ஜல்லிகற்கள் நிரவி பொக்லைன் இயந்திரம் மூலமாக சமன் செய்தனர். அதன்பின்னர் அப்படியே விட்டுவிட்டனர். பல நாட்களாக சாலையில் தார்கலவை போடாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இந்த பணியை நிறைவு செய்யும் வகையில் ஒப்பந்தக்காரர்களிடம் தார்கலவை போட்டு தார்சாலையை துரிதமாக அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: