குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய சார் ஆட்சியர் பொறுப்பேற்பு

குளித்தலை, அக். 15: கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய சார் ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு மாற்றம் ஆகியுள்ளார்.2017ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இதற்கு முன்பு மத்திய அரசின் தொழிற்சாலைகள் மற்றும் வணிகவரி இணை செயலாளர் ஆக பதவி வகித்தார்.ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்து கரூர் மாவட்டமாக மாற்றம் பெற்று குளித்தலை கோட்டம் உருவாக்கப்பட்டு முதல் முறையாக இந்திய ஆட்சிப்பணியில் தேர்ந்தெடுத்தவர் பொறுப்பு ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: