பொன்னமராவதி, அக்.15: பொன்னமராவதியில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு முகாம் மற்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பொன்னமராவதி வலம்புரியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தீத்தடுப்பு , இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது. சிலிண்டர் உபயோகிக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தீவிபத்துகளை அணைப்பது, இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு தீவிபத்துக்களை அணைப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மாணவர்களுக்கும் செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.