அறந்தாங்கி, அக்.15: கட்டுமாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது கட்டுமாவடி. இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவற்றில் அதிக உயரம் கொண்ட கண்டெய்னர், ஆம்னி பஸ்களும் அடங்கும். கட்டுமாவடிக்கும் காரக்கோட்டை பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. லேசான காற்று வீசினாலே கீழே விழும் நிலையில் அந்த மின்கம்பம் உள்ளது.