சீர்காழி அருகே பூம்புகார் அரசு கல்லூரியில் மழைக்கால சிறப்பு முகாம்

சீர்காழி, அக்.15: சீர்காழி வட்டார சுகாதாரத் துறை மற்றும் பூம்புகார் கல்லூரி பொருளியல் துறை இணைந்து பூம்புகார் அரசினர் கல்லூரி வளாகத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் அறிவொளி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் ராஜீ வரவேற்றார். முகாமில் அரசு சித்த மருத்துவ அலுவலர் பாரிராஜன் கலந்து கொண்டு சித்த மருத்துவம் குறித்து பேசினார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சித்த மருத்துவ உதவியாளர் ராகனி, சுகாதார ஆய்வாளர் துரைகார்த்திக் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளியல்துறை பேராசிரியர் நவின்குமார் நன்றி கூறினார்.

Related Stories: