காரைக்கால், அக்.15: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 10ம் தேதி படகில் மீன் அள்ளும்போது, மயங்கி விழுந்த 5 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரைக்கால் கிளிஞ்சல்மேட்டில் வசிப்பவர் செல்வகுமார். இவரது விசைப்படகில் கொண்டுவரப்பட்ட மீன் கழிவுகளை கடந்த 10ம் தேதி, படகின் கீழ் உள்ள மீன் சேமிப்பு கிடங்கிலிருந்து கிளிஞ்சல் மேட்டைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சக்திவேல்(20), அருண்(23), சதிஷ்(22), சஜாயாதர்(23), நாகை ஏனங்குடியைச் சேர்ந்த மாதவன்(22) ஆகிய 5 பேர் இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில், சேமிப்பு கிடங்கிலிருந்த விஷவாயுவில் சிக்கி 5 பேரும் மயங்கி விழுந்தனர். மீன் கெட்டுப்போகாமல் இருக்க தெளிக்கப்படும் ரசாயண பவுடர்தான் விஷ வாயுவாக மாறியதாக கூறப்படுகிறது.