நெய்வேலி, அக். 15: நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்துக்கு டேங்கர் லாரியில் அனுப்பிய பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட டிரைவர், கிளீனர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் புதிய அனல்மின் நிலையமான என்என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இங்கு நிலக்கரிக்கு பதிலாக பர்னஸ் ஆயில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து என்எல்சிக்கு பர்னஸ் ஆயில் டேங்கர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் என்எல்சி அனல்மின் நிலையத்துக்கு வந்த டேங்கர் லாரியை மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.