திரு த்துறைப்பூண்டி, அக்.15: திருத்துறைப்பூண்டி வர்த்தகசங்கக் கட்டிடத்தில் மத்தியஅரசின் பல்வகைமாற்றுத்திறன் உடையவர்களுக்கான தேசியநிறுவனத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு மூன்று நாள் மறுவாழ்வு தொடர் கல்விபயிற்சியினை பாரதமாதா மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளி நிறுவனர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பாரதமாதா மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர் ரவிந்திரன் வரவேற்றார். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் 30 சிறப்பாசிரியர்களுக்கு சென்னை தேசியநிறுவன மறுவாழ்வு நிபுணர் டாக்டர் தனவேந்தன் கருத்துரை வழங்கி பேசுகையில்: மாற்றுத்திறன் உடையமனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மூளை முடக்குவாதக் குழந்தைகள், புறஉலக சிந்தனைஇல்லாத குழந்தைகள்மற்றும் பல்வகைஊனங்கள்உடைய சிறப்புக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது குறித்தும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வாறுபாதிக்கப்படுகின்றனர்.