திருவாரூர், அக்.10: திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதிலும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் சரிவர தூர்வாராததன் காரணமாக வயல்வெளிகளை நீர் சரிவர சென்றடையவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் சம்பா சாகுபடியை சரிவர மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளதால் தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் 25 நாட்களுக்கு மேற்பட்ட பயிராக உள்ளதால் இதற்கு உரிய நீர் கிடைக்காமல் இருந்து வருகிறது.