புதுக்கோட்டை, அக்.10: புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தை அடுத்த நெடுங்குடியில் உள்ள தலித் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து புதுக்கோட்டையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அரிமளம் ஒன்றியத்திலுள்ள நெடுங்குடியில் தலித்துகளுக்கான மயானத்தில் உள்ள தகன மேடையை புனரமைத்து மேற்கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும். மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்.