கடலூர், அக். 10: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வரும் டிசம்பர் 3ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் (கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோய் குணமடைந்தோர்) 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ். சிறந்த ஆசிரியர் (பார்வை திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ். சிறந்த சமூகப் பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.