தேனி, அக். 9: பகல் நேரத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வைகை அணை, இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு என சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக வைகை அணை விளங்குகிறது. தினமும் இங்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வைகை அணையில் அரசு பயணியர் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில் வி.வி.ஐ.பி.,க்கள் தங்கும் விடுதிகள் மட்டும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. மற்ற சாதாரண விடுதிகள் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.