கிராவல் கடத்திய லாரி பறிமுதல்

அலங்காநல்லூர், அக். 4: அலங்காநல்லூர் பெறியாற்று கால்வாய் அருகே உள்ள சாத்தியாறு ஓடைப் பகுதியில் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.  அப்போது லாரி டிரைவர் தப்பி சென்றார். மேலும் அந்த லாரியில் அரசு அனுமதியின்றியும், உரிய ஆவணங்களின்றியும் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் லாரியை அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் வருவாய்துறையினர் ஒப்படைத்து புகார் செய்தனர். இதன்பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: